| |
விளக்கம்:
பொடியாக அமைந்த திருநீறாகிய வெள்ளிய சந்தனச் சேறும் முடிமணியாகிய
ஒளி வீசும் பிறையும், அழகிய
புலித்தோல் ஆடையும், வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறமும், தலைமை
பொருந்திய பாதுகாவலாக அமைந்த, பகைவரோடு மாறுபடும் காளையும்,
மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும், திண்ணிய கரையைக் கொண்ட
பெரிய நீர்ப்பரப்பினதாகிய கெடிலயாற்று அபிடேகத்திற்குரிய
தீர்த்தமும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியேம் யாம். ஆதலின்
எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனித்
தோன்றப்போவதும் இல்லை.
(Source from www.thevaram.org)
|