Home
About Us

Vision & Mission

Saivam

Audio/Video

FAQ

Forum
E-Calendar

MSNK Store

Photo Gallery

Feedback/Enquiry

Contact Us

     
 
     திருமுறை விளக்கம் > திருநாவுக்கரசர் தேவாரம
          
 

 

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்  

வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

   
 

விளக்கம்:

பொடியாக அமைந்த திருநீறாகிய வெள்ளிய சந்தனச் சேறும் முடிமணியாகிய ஒளி வீசும் பிறையும், அழகிய புலித்தோல் ஆடையும், வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறமும், தலைமை பொருந்திய பாதுகாவலாக அமைந்த, பகைவரோடு மாறுபடும் காளையும், மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும், திண்ணிய கரையைக் கொண்ட பெரிய நீர்ப்பரப்பினதாகிய கெடிலயாற்று அபிடேகத்திற்குரிய தீர்த்தமும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியேம் யாம். ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனித் தோன்றப்போவதும் இல்லை.

 

(Source from www.thevaram.org)

 - நான்காம் திருமுறை

 

<Back to Saivam>