திருமுறை விளக்கம் > திருஞானசம்பந்தர் தேவாரம்
          
 

 

 

 

பூத்தேர்ந் தாயன கொண்டு நின் பொன்னடி

ஏத்தா தாரில்லை எண்ணுங்கால்

ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்

கூத்தீ ரும்ம குணங்களே

 

   
 

விளக்கம்:

திருவோத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தி அருள் புரியும் கூத்த பெருமானே, நறுமலர்களை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, பூசைக்குரிய பொருட்களைக் கொண்டு உன் அருங்குணங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏந்தி வணங்காதார் இல்லை.

 

 

 

திருமுறை 1   |   பதிகம் 54   |   பாடல் 580

 

<Back to Saivam>