பூத்தேர்ந் தாயன கொண்டு நின் பொன்னடி
ஏத்தா தாரில்லை எண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே
விளக்கம்:
திருவோத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தி அருள் புரியும் கூத்த பெருமானே, நறுமலர்களை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, பூசைக்குரிய பொருட்களைக் கொண்டு உன் அருங்குணங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏந்தி வணங்காதார் இல்லை.
திருமுறை 1 | பதிகம் 54 | பாடல் 580
<Back to Saivam>