| |
விளக்கம்:
பாலைக், காலமறிந்து கொடுக்கின்ற தாயைக் காட்டிலும்
மிகவும் அன்பு கொண்டு,
நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி, உள்ளத்தில்
ஞானத்தைப் பெருக்கி, அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து நான்கு
புறங்களிலும் உடன் திரிந்த அருட்செல்வமே! சிவபிரானே! நான் உன்னைத்
தொடர்ந்து உறுதியாகப் பற்றியுள்ளேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச்
செல்வது?
|