திருமருகல்
பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரம் ஆயது ஓர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே
விளக்கம்:
திருமருகலில் எழுந்தளியுள்ள இறைவரின் திருவடிகளை வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகலாம்; அறியாமை நீங்கப்பெறலாம்; மாறுபட்டதாகிய சிந்தை திருத்தலாம்; கடவுண்மயமாகிய ஒப்பற்ற மேலான பேரானந்தத்தைப் பருகலாம்.
<Back to Saivam>