திருமுறை விளக்கம் > திருஞானசம்பந்தர் தேவாரம்
          
 

 

 

 

மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை

புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை

திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய

அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே

   
 

விளக்கம்:

திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும், தேவர்கட்கெல்லாம் தேவனாக விளங்குபவனும், அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள் (திருநீறு, உருத்திராக்கம், சடாமுடி) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும், மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும், சிவபுண்ணியச் சரிதை கேட்க விருபுவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும்

 

 

 

 

<Back to Saivam>