| |
அறத்துப்பால்
>
விருந்தோம்பல் |
| |
|
|
|
|
| |
|
குறள்
81 |
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்
விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. |
|
| |
|
விளக்கம் |
வீட்டில் இருந்து
பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்
விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
82 |
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. |
|
| |
|
விளக்கம் |
விருந்தினராக வந்தவர்
வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது
சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது
அன்று. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
83 |
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. |
|
| |
|
விளக்கம் |
தன்னை நோக்கி வரும்
விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை,
துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
84 |
அகனமர்ந்து செய்யாள் உறையும்
முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். |
|
| |
|
விளக்கம் |
நல்ல விருந்தினராய்
வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில்
மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
85 |
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ
விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். |
|
| |
|
விளக்கம் |
விருந்தினரை முன்னே
போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய
நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
86 |
செல்விருந்து ஓம்பி வருவிருந்து
பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. |
|
| |
|
விளக்கம் |
வந்த விருந்தினரைப்
போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன்,
வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
87 |
இனைத்துணைத் தென்பதொன் றில்லை
விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். |
|
| |
|
விளக்கம் |
விருந்தோம்புதலாகிய
வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி
கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற
அளவினதாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
88 |
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்
விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். |
|
| |
|
விளக்கம் |
விருந்தினரை ஓம்பி அந்த
வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு
இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
89 |
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. |
|
| |
|
விளக்கம் |
செல்வநிலையில் உள்ள வறுமை
என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது
அறிவிலிகளிடம் உள்ளதாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
90 |
மோப்பக் குழையும் அனிச்சம்
முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து. |
|
| |
|
விளக்கம் |
அனிச்சப்பூ மோந்தவுடன்
வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு
நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார். |
|
| |
|
|
|
|
| |
|
|
|
|
| |
<Back
to Saivam> |