| |
அறத்துப்பால்
> வாழ்க்கைத்
துணைநலம் |
| |
|
|
|
|
| |
|
குறள்
51 |
மனைக்தக்க மாண்புடையள்
ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. |
|
| |
|
விளக்கம் |
இல்வாழ்க்கைக்கு ஏற்ற
நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத்
தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
52 |
மனைமாட்சி இல்லாள்கண்
இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். |
|
| |
|
விளக்கம் |
இல்வாழ்க்கைக்கு தக்க
நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை
வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
53 |
இல்லதென் இல்லவள்
மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?. |
|
| |
|
விளக்கம் |
மனைவி நற்பண்பு
உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு
இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
54 |
பெண்ணின் பெருந்தக்க
யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். |
|
| |
|
விளக்கம் |
இல்வாழ்க்கையில் கற்பு
என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட
பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
55 |
தெய்வம் தொழாஅள்
கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. |
|
| |
|
விளக்கம் |
வேறு தெய்வம்
தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது
துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
56 |
தற்காத்துத்
தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். |
|
| |
|
விளக்கம் |
கற்பு நெறியில்
தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி,
தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல்
வாழ்கின்றவளே பெண். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
57 |
சிறைகாக்கும் காப்பெவன்
செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. |
|
| |
|
விளக்கம் |
மகளிரைக் காவல்
வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்?
அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும்
கற்பே சிறிந்தது. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
58 |
பெற்றாற் பெறின்பெறுவர்
பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. |
|
| |
|
விளக்கம் |
கணவனைப் போற்றிக்
கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய
மேலுலகவாழ்வைப் பெறுவர். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
59 |
புகழ்புரிந்த
இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. |
|
| |
|
விளக்கம் |
புகழைக் காக்க
விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும்
பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
60 |
மங்கலம் என்ப மனைமாட்சி
மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. |
|
| |
|
விளக்கம் |
மனைவியின் நற்பண்பே
இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப்
பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர். |
|
| |
|
|
|
|
| |
|
|
|
|
| |
<Back
to Saivam> |