| |
அறத்துப்பால்
> வான்சிறப்பு
|
| |
|
|
|
|
| |
|
குறள்
11 |
வான்நின்று உலகம் வழங்கி
வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. |
|
| |
|
விளக்கம் |
மழை
பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து
வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
12 |
துப்பார்க்குத் துப்பாய
துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. |
|
| |
|
விளக்கம் |
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத்
தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது
மழையாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
13 |
விண்இன்று பொய்ப்பின்
விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. |
|
| |
|
விளக்கம் |
மழை
பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக
இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை
வருத்தும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
14 |
ஏரின் உழாஅர் உழவர்
புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். |
|
| |
|
விளக்கம் |
மழை
என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப்
பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு
உழமாட்டார். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
15 |
கெடுப்பதூஉம்
கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. |
|
| |
|
விளக்கம் |
பெய்யாமல்
வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம்
கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க
வல்லதும் மழையாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
16 |
விசும்பின் துளிவீழின்
அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. |
|
| |
|
விளக்கம் |
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல்,
உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண
முடியாது. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
17 |
நெடுங்கடலும் தன்நீர்மை
குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். |
|
| |
|
விளக்கம் |
மேகம்
கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல்
விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
18 |
சிறப்பொடு பூசனை செல்லாது
வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. |
|
| |
|
விளக்கம் |
மழை
பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக
நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும்
நடைபெறாது. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
19 |
தானம் தவம்இரண்டும் தங்கா
வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். |
|
| |
|
விளக்கம் |
மழை
பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர்
பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும்
தவமும் இல்லையாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
20 |
நீர்இன்று அமையாது
உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. |
|
| |
|
விளக்கம் |
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை
நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும்
நிலைபெறாமல் போகும். |
|
| |
|
|
|
|
| |
|
|
|
|
| |
<Back
to Saivam> |