| |
அறத்துப்பால்
>
செய்ந்நன்றி அறிதல் |
| |
|
|
|
|
| |
|
குறள்
101 |
செய்யாமல் செய்த உதவிக்கு
வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. |
|
| |
|
விளக்கம் |
தான் ஓர் உதவியும் முன்
செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு
மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக்
கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
102 |
காலத்தி னாற்செய்த நன்றி
சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. |
|
| |
|
விளக்கம் |
உற்ற காலத்தில் ஒருவன்
செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை
அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
103 |
பயன்தூக்கார் செய்த உதவி
நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. |
|
| |
|
விளக்கம் |
இன்ன பயன் கிடைக்கும்
என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை
ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
104 |
தினைத்துணை நன்றி
செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். |
|
| |
|
விளக்கம் |
ஒருவன் தினையளவாகிய
உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர்,
அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
105 |
உதவி வரைத்தன்று உதவி
உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. |
|
| |
|
விளக்கம் |
கைமாறாகச் செய்யும் உதவி
முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி
செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
106 |
மறவற்க மாசற்றார் கேண்மை
துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. |
|
| |
|
விளக்கம் |
குற்றமற்றவரின் உறவை
எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில்
உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
107 |
எழுமை எழுபிறப்பும்
உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. |
|
| |
|
விளக்கம் |
தம்முடைய துன்பத்தைப்
போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும்
மறவாமல் போற்றுவர் பெரியோர். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
108 |
நன்றி மறப்பது நன்றன்று
நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. |
|
| |
|
விளக்கம் |
ஒருவரர்முன்செய்த நன்மையை
மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே
மறந்து விடுவது அறம். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
109 |
கொன்றன்ன இன்னா செயினும்
அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். |
|
| |
|
விளக்கம் |
முன் உதவி செய்தவர்
பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும்,
அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத்
துன்பம் கெடும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
110 |
எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. |
|
| |
|
விளக்கம் |
எந்த அறத்தை
அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர்
செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை. |
|
| |
|
|
|
|
| |
|
|
|
|
| |
<Back
to Saivam> |