| |
அறத்துப்பால்
> நீத்தார் பெருமை
|
| |
|
|
|
|
| |
|
குறள்
21 |
ஒழுக்கத்து நீத்தார்
பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. |
|
| |
|
விளக்கம் |
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின்
பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின்
துணிவாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
22 |
துறந்தார் பெருமை
துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. |
|
| |
|
விளக்கம் |
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல்,
உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை
கணக்கிடுவதைப்போன்றது. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
23 |
இருமை வகைதெரிந்து
ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. |
|
| |
|
விளக்கம் |
பிறப்பு
வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை
ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே
உலகத்தில் உயர்ந்தது. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
24 |
உரனென்னும் தோட்டியான்
ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. |
|
| |
|
விளக்கம் |
அறிவு
என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி
காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
25 |
ஐந்தவித்தான் ஆற்றல்
அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. |
|
| |
|
விளக்கம் |
ஐந்து
புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு,
வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று
ஆவான். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
26 |
செயற்கரிய செய்வார்
பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். |
|
| |
|
விளக்கம் |
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர்.
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
27 |
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென
ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. |
|
| |
|
விளக்கம் |
சுவை, ஒளி,
ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின்
வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது
உலகம். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
28 |
நிறைமொழி மாந்தர் பெருமை
நிலத்து
மறைமொழி காட்டி விடும். |
|
| |
|
விளக்கம் |
பயன்
நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை,
உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே
காட்டிவிடும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
29 |
குணமென்னும் குன்றேறி
நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. |
|
| |
|
விளக்கம் |
நல்ல
பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு
கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து
ஒருவரைக் காத்தல் அரிதாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
30 |
அந்தணர் என்போர் அறவோர்மற்
றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். |
|
| |
|
விளக்கம் |
எல்லா
உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு
ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். |
|
| |
|
|
|
|
| |
|
|
|
|
| |
<Back
to Saivam> |