| |
அறத்துப்பால்
> இல்வாழ்க்கை |
| |
|
|
|
|
| |
|
குறள்
41 |
இல்வாழ்வான் என்பான்
இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
|
|
| |
|
விளக்கம் |
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின்
இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற
துணையாவான். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
42 |
துறந்தார்க்கும்
துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
|
|
| |
|
விளக்கம் |
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும்
இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
43 |
தென்புலத்தார் தெய்வம்
விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
|
|
| |
|
விளக்கம் |
தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான்
என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த
கடமையாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
44 |
பழியஞ்சிப் பாத்தூண்
உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும்
இல். |
|
| |
|
விளக்கம் |
பொருள்
சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு
செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால்,
அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
45 |
அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
|
|
| |
|
விளக்கம் |
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால்,
அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
46 |
அறத்தாற்றின் இல்வாழ்க்கை
ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.
|
|
| |
|
விளக்கம் |
ஒருவன்
அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால்,
அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
47 |
இயல்பினான் இல்வாழ்க்கை
வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
|
|
| |
|
விளக்கம் |
அறத்தின்
இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல
திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
48 |
ஆற்றின் ஒழுக்கி
அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
|
|
| |
|
விளக்கம் |
மற்றவரை
அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை
, தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய
வாழ்க்கையாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
49 |
அறனென்ப் பட்டதே
இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின்
நன்று. |
|
| |
|
விளக்கம் |
அறம்
என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்.
அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல்
விளங்கினால் மேலும் நன்மையாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
50 |
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
|
|
| |
|
விளக்கம் |
உலகத்தில்
வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில்
உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான். |
|
| |
|
|
|
|
| |
|
|
|
|
| |
<Back
to Saivam> |