| |
அறத்துப்பால்
>
அறன்வலியுறுத்தல்
|
| |
|
|
|
|
| |
|
குறள்
31 |
சிறப்புஈனும் செல்வமும்
ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. |
|
| |
|
விளக்கம் |
அறம்
சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்:
ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு
யாது?. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
32 |
அறத்தினூஉங்கு ஆக்கமும்
இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. |
|
| |
|
விளக்கம் |
ஒரு
வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை:
அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
33 |
ஒல்லும் வகையான் அறவினை
ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். |
|
| |
|
விளக்கம் |
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல்
செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
34 |
மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்தறன்
ஆகுல நீர பிற. |
|
| |
|
விளக்கம் |
ஒருவன்
தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம்
அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை
உடையவை. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
35 |
அழுக்காறு அவாவெகுளி
இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். |
|
| |
|
விளக்கம் |
பொறாமை,
ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு
குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து
ஒழுகுவதே அறமாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
36 |
அன்றறிவாம் என்னாது
அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. |
|
| |
|
விளக்கம் |
இளைஞராக
உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று
எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும்
காலத்தில் அழியா துணையாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
37 |
அறத்தாறு இதுவென வேண்டா
சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. |
|
| |
|
விளக்கம் |
பல்லக்கை
சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய
அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
38 |
வீழ்நாள் படாஅமை
நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். |
|
| |
|
விளக்கம் |
ஒருவன்
அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால்
அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை
அடைக்கும் கல்லாகும். |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
39 |
அறத்தான் வருவதே இன்பம்
மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. |
|
| |
|
விளக்கம் |
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு
பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும்
இல்லாதவை. |
|
| |
|
|
|
|
| |
|
குறள்
40 |
செயற்பால தோரும் அறனே
ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. |
|
| |
|
விளக்கம் |
ஒருவன்
வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே.
செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. |
|
| |
|
|
|
|
| |
|
|
|
|
| |
<Back
to Saivam> |